30 செப்டம்பர், 2010

இந்திய - இலங்கைக் கடற்படையினர் நடுக்கடலில் பேச்சுவார்த்தை



இந்திய - இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் பேச்சுவார்த்தை நடத்தினர். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தவண்ணம் உள்ளது.

இதுதொடர்பாகவே இந்திய மற்றும் இலங்கை கடற்படையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.



பேச்சுவார்த்தையின் போது இனி தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடைபெறாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை கடற்படை அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

கடலோர பாதுகாப்பைப் பலப்படுத்தும் வகையில் இருநாட்டு கடற்படை மற்றும் காவல்படைகள் இணைந்து சுற்றுக்காவல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இதன் போது வலியுறுத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக