30 செப்டம்பர், 2010

ஜனாதிபதியின் செயலானது சர்வாதிகாரத்தை தெளிவு படுத்துகின்றது: ஜே.வி.பி

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஜனாதிபதி அங்கீகாரம் வழங்கியுள்ளார். இச் செயலானது சர்வதிகாரத்தை தெளிவுப் படுத்துகின்றது என ஜே.வி.பி. யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே டில்வின் சில்வா இவ்வாறு தெரிவித்தார்.

யுத்தத்தை வெற்றி கொண்ட முன்னாள் இராணுவத் தளபதிக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நாட்டில் பல குற்றச் செயல்களை புரிந்தவர்கள் சுதந்திரமாக இருக்கின்றனர். நாட்டில் ஜனநாயம் மாறி சர்வதிகாரத்தை ஆட்சி தொடர்கிறது. இதனை ஜே.வி.பி எதிர்த்து போராடவும் தயாராக உள்ளது என மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக