30 செப்டம்பர், 2010

நுவரெலிய - வெலிமட வீதியில் பயணம் செய்வோருக்கு எச்சரிக்கை



தற்போது மழை காலநிலை ஆரம்பமாகியுள்ளதால் நுவரெலியா - வெலிமடை வீதியை மிகுந்த முன்னெச்சரிக்கையோடு வாகனப் போக்குவரத்துக்காகப் பயன் படுத்துமாறு அனர்த்த முகாமைத் துவ நிலையத்தின் நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் கிரந்த ஹேமவர்தன வேண்டு கோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், நுவரெலியா - வெலிமடை நெடுஞ்சாலை தற்போது புனரமைக்கப்படு கின்றது. இதே நேரம் மழைக் கால நிலையும் ஆரம்பமாகி யுள்ளது. இதன் விளைவாக இப்பாதையின் பல இடங்க ளில் சேறு ஏற்பட்டிருக்கின்றது.

இதன் காரணத்தினால் இப் பாதையில் முன்னெச்சரிக்கை யோடு வாகனங்களைச் செலுத்துவது மிகவும் அவசியம். இல்லா விட்டால் வாகனங்கள் பாதையை விட்டு சறுக்கி, குடைசாய்ந்து விபத்துக்கள் ஏற்படக் கூடிய அபாயம் நிலவுகின்றன. அண்மையில் பஸ் வண்டியொன்று குடைசாய்ந் ததில் 23 பேர் காயமடைந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக