30 செப்டம்பர், 2010

தமிழ் கட்சிகளின் அரங்கம் எதிர்வரும் ஒக்டோபர் 2 ஆம் திகதி நடைபெறும்: சிவாஜிலிங்கம்

தமிழ் கட்சிகளின் அரங்கம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெறும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

'அனைத்து தமிழ் கட்சிகள் ஒருங்கினைந்து இருக்கும் தமிழ் கட்சிகளின் அரங்கத்தோடு இணைந்து கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு உத்தியோக பூர்வமாக அழைப்பு விடுத்திருந்தோம் இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் ஏற்று கொண்டு இருந்தனர். எனினும் இதுதொடர்பாக இந்த நிமிடம் வரை உத்தியோக பூர்வமான பதில் எமக்கு கிடைக்கவில்லை.

எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நாடு திரும்பியதும் பதில் கிடைக்குமென எதிர்பார்க்கின்றோம்". என தெரிவித்தார்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவை தொடர்பு கொண்டு கேட்டபோது 'தமிழ் கட்சிகள் அரங்கத்தில் பங்கேற்பது தொடர்பாக இதுவரை தீர்மானிக்க வில்லை. எனினும் இது தொடர்பாக கட்சி குழுக் கூட்டத்திலேயே தீர்மானிக்கப்படும்" என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக