30 செப்டம்பர், 2010

சரத் பொன்சேகாவுக்கு எதிரான 2 ஆவது தீர்ப்புக்கு ஜனாதிபதி அங்கீகாரம்





ஜனநாயகத் தேசியக் கூட்டணித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகாவுக்கு எதிரான இரண்டாவது நீதிமன்ற தீர்ப்புக்கு ஜனாதிபதி அங்கீகாரம் வழங்கியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவுக்கு இரண்டாவது நீதிமன்றம் 30 மாதகால சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

அச்சமயம், ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் 65 ஆவது அமர்வில் கலந்து கொள்ள சென்றிருந்ததால், அவர் நாடு திரும்பியதும், அவரது தீர்மானத்துகமைவாகவே தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இலங்கைச் சட்டத்தின் அடிப்படையில் ஆறு மாதத்திற்கு மேல் சிறைத்தண்டனை அனுபவிக்கும் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி, சரத் பொன்சேகா தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக