24 செப்டம்பர், 2010

கண்டியில் சூதாட்ட நிலையம் பொலிஸாரால் சுற்றிவளைப்பு: பெண்கள் உட்பட 74 பேர் கைது

கண்டி நகரில் சட்ட விரோதமான முறையில் நடாத்தப்பட்ட ‘கெஸினோ’ சூதாட்ட நிலையம் ஒன்றினை கண்டி பொலிஸார் சுற்றி வளைத்து அங்கிருந்த பெண்கள் உட்பட 74 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

கண்டி பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் இச்சுற்றி வளைப்பு இடம்பெற்றது.

கைது செய்யப்பட்டவர்களில்; ஒன்பது பெண்களும் அச்சூதாட்ட நிலையத்தின் ஊழியர்கள் 24 பேரும் அடங்குவர்.

நீண்ட காலமாக நடாத்தப்பட்டு வந்ததாகக் கூறப்படும் இச்சூதாட்ட நிலையத்தை சுற்றிவளைத்த போது இரண்டு இலட்சம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தவிர கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வசமுள்ள பணத்தின் தொகை சம்பந்தமாக கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன் எடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக