24 செப்டம்பர், 2010

கிழக்கு முதல்வருக்கு மட்டக்களப்பு முன்னாள் எம்.பி. புகழாரம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி. இராஜதுரை கிழக்கு மாகாண முதலமைச்சரின் சேவை நலனைப் பாராட்டி அவருக்குப் பொன்னாடை போற்றிக் கௌரவித்தார்.

புதன்கிழமை மட்டக்களப்பில் அவரது வீட்டில் முதலமைச்சர் சநத்திரகாந்தனைச் சந்தித்து பேசுகையில்,

"கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கான கட்சி என்ற அடிப்படையில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பல சேவைகளைப் புரிந்து வருகிறது. மக்களின் நலனில் அக்கறை கொள்கின்ற ஒரு கட்சியாகவும் இது செயற்படுகிறது.

எனது ஆதரவு த.ம.வி.பு. கட்சிக்கு என்றும் உண்டு. மேலும் பல சேவைகளை எமது மக்களுக்காக ஆற்ற வேண்டி இருக்கின்றது. அதற்கு த.ம.வி.பு. கட்சியுடனான உறவு வலு சேர்க்கும் என நான் நம்புகிறேன்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக