24 செப்டம்பர், 2010

ஈழப்போர் பற்றிய ஓவியக் கண்காட்சி: வைகோ இன்று திறப்பு

இலங்கையில் கடந்த 27 ஆண்டுகளாக நடைபெற்று வந்த போர், அதனால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள், அந்நாட்டு மக்களின் அவல நிலை என்பன பற்றிய ஓவியங்களை உள்ளடக்கிய கண்காட்சி ஒன்று இன்று திருச்சியில் திறந்து வைக்கப்படுகிறது.

திருச்சி டி.எம்.எஸ்.எஸ்.எஸ். ஹாலில் ஓவியர் புகழேந்தியின் தயாரிப்பில் `போர் முகங்கள்` என்ற இந்த ஓவிய கண்காட்சியை ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கண்காட்சியை திறந்து வைக்கிறார்.

இந்நிகழ்வுக்கு திருச்சி மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் மலர்மன்னன் தலைமை தாங்குகிறார்.

கண்காட்சி எதிர்வரும் 26ஆந் திகதி வரை நடைபெறும். தினமும் காலை 10.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பொதுமக்கள் கண்காட்சியைப் பார்வையிடலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக