24 செப்டம்பர், 2010

புலிகள் இயக்கத்திற்கு இந்தியாவில் தடை ஏன்? : பழ.நெடுமாறன் கேள்வி

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுதலைப்புலிகளை முற்றாக அழித்துவிட்டோம் என்று கூறுகின்றார். அது உண்மை என்றால், அழிக்கப்பட்ட இயக்கத்திற்கு இந்தியாவில் தடை ஏன்?

சிறையில் இருக்கும் சீமானை விடுதலை செய்ய வலியுறுத்தி 'கருத்துரிமைக்களம்', சார்பில் கோவையில் நேற்று கூட்டம் ஒன்று நடந்தது. தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன் இக்கூட்டத்தில் பங்கேற்றார்.

இன்று அவர் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

இதன்போது,

"இந்தியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் கூறி வருகின்றன.

நியூசிலாந்தில் சமீபத்தில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்று கைது செய்யப்பட்டவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்,

"விடுதலைப்புலிகள் அமைப்பு என்பது ஒரு அரசியல் இயக்கத்திற்கான அம்சங்களையும், நேர்மையையும் கொண்ட ஒரு மிகப்பெரிய தேசிய விடுதலை இயக்கம்" என்று கூறியிருக்கிறார்கள்.

ஆனால் இங்கே மட்டும் மத்திய, மாநில அரசுகள் விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட வேண்டிய இயக்கம் என்கிறார்கள். அது தீவிரவாத இயக்கம் என்கிறார்கள்.

இலங்கையில் விடுதலைப்புலிகளை முற்றாக அழித்துவிட்டோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறுகின்றார். அது உண்மை என்றால், அழிக்கப்பட்ட இயக்கத்திற்கு இந்தியாவில் தடை ஏன்?

அந்தத் தடையை நீக்குவதற்குத்தான் வைகோ டில்லியில் வாதாடிக் கொண்டிருக்கிறார்" என்று பழ. நெடுமாறன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக