25 செப்டம்பர், 2010

கொழும்பின் புறநகர் பகுதியில் இனந்தெரியா ஆயுததாரிகளினால் பாரிய கொள்ளை


சிறிலங்கா தலைநகர் கொழும்பில் பாரிய கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அறியப்படுகிறது. இக் கொள்ளைச் சம்பவத்தில் சுமார் 70 மில்லியன் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டிருப்பதாக முதற்கட்ட விசாரணைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் அறிகையில்; கொழும்பின் புறநகரில் அமைந்துள்ள பேலியகொட பிரதேசத்தில் இன்று அதிகாலையில் இக் கெள்ளைச் சம்பவம் இடம்பெற்றதாகவும், மோட்டார் சைக்கிள்களில் ஆயுதங்களுடன் வந்த இனந்தெரியாத நபர்களினாலேயே இக் கொள்ளை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிய வருகிறது.

தனியார் வங்கி ஒன்றின் தானியங்கி இயந்திரத்தில் வைப்புச் செய்வதற்காகக் கொண்டு வரப்பட்ட பணமே கொள்ளையிடப்பட்டதாகவும், இக் கொள்ளைச் சம்பவத்தில் ஆயுததாரிகள் ஐந்து பேர் ஈடுபட்டிருந்ததாகவும் காவல்துறை வட்டாரச் செய்திகளை மேற்கோள் காட்டித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை பொலிசார் முடுக்கிவிட்டுள்ளதாக அறியப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக