20 ஆகஸ்ட், 2010

கே. பி. தொடர்பான பொன்சேகாவின் கருத்து முற்றிலும் உண்மைக்கு புறம்பு அமைச்சர் கெஹலிய





கே. பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் கைது தொடர்பாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ள கருத்துக்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை. எமது உளவுப் பிரிவு அதிகாரிகள் இருவரே கைது செய்து அழைத்து வந்தனரென அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

குமரன் பத்மநாதனை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் அவர் கைதாகும் தினத்திலிருந்து சுமார் மூன்று மாத காலத்துக்கு முன்னர் இருந்தே ஆரம்பமானது.

குமரன் பத்மநாதனின் கைது தொடர்பாக எனக்கு சகல விபரங்களும் தெரியும். ஆனால் அதை நான் இங்கு குறிப்பிட விரும்ப வில்லை. எனினும் அவர் தொடர்பாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ள கருத்துக்களை நான் முற்றாக மறுக்கிறேன்; அவை உண்மையல்ல என்றார்.

குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரும் வரை பாதுகாப்பு செயலாளருக்கும் தெரியாது. இது முற்றிலும் வெளிநாட்டு உளவுத்துறையினரின் முயற்சிதான் என சரத் பொன்சேகா ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள கருத்து தொடர்பாக செய்தியாளர் ஒருவர் கேட்ட போதே அமைச்சர் கெஹலிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கே.பி. இப்போது எங்கு வைக்கப்பட்டுள்ளார் என அமைச்சரிடம் கேட்ட போது,

பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்கமைய இராணுவ பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக