20 ஆகஸ்ட், 2010

மேர்வின் சில்வா மீதான குற்றச்சாட்டு : இன்று ஆய்வு

நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராயும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள மூவரடங்கிய குழு இன்று தனது முதலாவது அமர்வை மேற்கொள்ளவுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இந்த அமர்வு இடம்பெறவுள்ளதாக, குழுவின் உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம் சஹீட் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கென, மூவரடங்கிய குழுவொன்றை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைத்தது.

அதன் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஜயரத்ன வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். செயலாளராக மகிந்த சமரவீரவும், உறுப்பினராக சட்டத்தரணி எச்.எம் சஹீடும் செயற்படுகின்றனர்.

சமுர்த்தி உத்தியோகஸ்தரை மரத்தில் கட்டியது தொடர்பிலான குற்றச்சாட்டே முன்னாள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா மீது சுமத்தப்பட்டுள்ளது. இது குறித்து தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

எனினும் இந்தச் சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் எதுவுமில்லை என்பதால் பொதுச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக