20 ஆகஸ்ட், 2010

இலங்கை - தமிழக கடற்றொழிலாளர் பேச்சுவார்த்தை: இலங்கை பிரதிநிதிகள் முன் 26 மீனவர்கள் விடுவிப்பு

தமிழ்நாடு, இராமேஸ்வரத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 26 இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஐந்து வள்ளங்களும் மீனவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இலங்கையிலிருந்து தமிழகம் சென்ற கடற்றொழிலாளர்கள் சங்க பிரதிநிதிகள் முன்னிலையிலேயே இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இலங்கையிலிருந்து சென்ற குழுவினர் நேற்று முன்தினம் இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களை சந்தித்து பேச்சு நடத்தினர்.

நீர்கொழும்பு, கல்பிட்டி, திருமலை, மதுரன்குளி போன்ற பகுதி மீனவர்கள் மூன்று மாதத்துக்கு முன்னர் தமிழகத்தின் இராமேஸ்வரத்தில் தடுத்து வைக்கப்பட்டி ருந்தனர். திருமலையைச் சேர்ந்த கபில புதா, தனுஷ்க புதா, ரன்திலினி துவ என்ற வள்ளங்களும், விதஷேன் புதா என்ற நீர்கொழும்பு வள்ளமும், சந்துனி துவ என்ற மாத்தறை வள்ளமும் விடுவிக்கப்பட்டது. இவர்கள் 26 பேரும் தமது வள்ளங்கள் மூலமே இலங்கைக்கு வருகை தந்தனர்.

இலங்கை மீனவர் சங்க குழுவினர் நேற்று நாகபட்டினம் இழுவைப் படகுகள் துறைமுகத்தில் இழுவைப் படகு உரிமையாளர்களுடன் பேச்சு நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து இலங்கை மீனவர் சங்க குழுவினர் பட்டுக் கோட்டையருகே உள்ள மல்லிப்பட்டினத்தில் தமிழக மீனவர்களை சந்தித்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய யாழ்ப்பாண மீனவர்கள் சங்கத் தலைவர் சூரிய குமார்.

இலங்கைக் கடல் பகுதியில் மீன்கள் அதிகம் இருப்பதாலேயே இந்திய மீனவர்கள் இலங்கை பகுதிக்கு வருகின்றனர். மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை தேடும் அதேநேரத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கும் நேரிடுகிறது.

எனவே இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதை தடுக்க இன்று தொடங்க உள்ள சென்னை மாநாட்டில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக