20 ஆகஸ்ட், 2010

கிளிநொச்சி மாவட்டம் ஆறு கிராம சேவகர் பிரிவுகளில் இன்று மீள்குடியேற்றம் ஆரம்பம்

கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆறு கிராம சேவகர் பிரிவுகளில் இன்று மீள் குடியேற்றம் இடம்பெறவுள்ளது.

கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஸ்கந்தபுரம், காந்திநகர், கோணாவில், அக்கரையான்குளம், ஆனைவிழுந்தான்குளம், வன்னேரிக்குளம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளிலேயே இந்த மீள் குடியேற்றம் இடம் பெறவுள்ளன.

அதேவேளை எதிர்வரும் 24 ஆம் திகதி உருத்திரபுரம் வடக்கு, கிழக்கு, மேற்கு கிராம சேவையாளர் பிரிவுகளிலும் சிவநகர், ஜெயந்தி நகர், கனகபுரம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளிலும் மீள் குடியேற்றம் இடம்பெறவுள்ளன.

அத்துடன் எதிர்வரும் 30 ஆம் திகதி திருநகர் வடக்கு, திருநகர் தெற்கு, கணேசபுரம், பெரிய பரந்தன், அம்பாள் நகர் ஆகிய பகுதி களிலும் மீள்குடியேற்றம் நடை பெறவுள்ளன.

இவ்வாறு மீள் குடியேற்றப்பட வுள்ளவர்கள் அனைவரும் நலன் புரி முகாமில் இல்லாது தங்களினது உறவினர்கள், நண்பர்கள், சுற்றத்தார் வீடுகளில் தங்கியிருப்பவர்களே இந்த மீள்குடியேற்ற அமர்வில் இடம் பெறவுள்ளனர் எனவும் தெரி விக்கப்படுகின்றன.

கடந்த 16 ஆம் திகதி கரைச்சி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள திருவையாறு மேற்கு, பாரதிபுரம், மனையாளபுரம், பொன்னகர், ஊற்றுப்புலம், புதுமுறிப்பு ஆகிய இடங்களில் மீள்குடியேற்றம் இடம் பெற்றிருந்தன.

கிளிநொச்சியில் உள்ள மத்திய கல்லூரியே மீள் குடியமர்வுக்கான இடைத் தங்கல் முகாமாகவும் மீளக் குடியேற்றப்படுபவர்களினது விபரங் களை பதிவு செய்யும் அலுவலக மாகவும் தற்பொழுது இயங்கி வருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக