20 ஆகஸ்ட், 2010

மூதூரில் 17 தொண்டர்கள் கொலை குறித்த விசாரணை இன்னுமில்லை:பிரான்ஸ்


ஏ.சீ.எப். தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த 17 ஊழியர் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பெர்னாட் குச்னர் தெரிவித்துள்ளார்.

2006 ஆம் ஆண்டு ஏ.சீ.எப். தொண்டு நிறுவன ஊழியர்கள் 17 பேர் மூதூரில் வைத்து படுகொலை செய்யப்பட்டனர். இவர்களைக் கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து இதுவரை விசாரணை எதுவும் நடத்தப்படவுமில்லை.

இந்தப் படுகொலைச் சம்பவம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளும், அரசாங்கமும் ஒருவரை மாறி ஒருவர் குற்றம் சுமத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

மனிதாபிமான தொண்டர்களின் பாதுகாப்பு மிகவும் முதன்மையானதெனத் தெரிவித்த குச்னர், இது குறித்து எதிர்வரும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் சபைக் கூட்டத்தில் தாம் வலியுறுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக