20 ஆகஸ்ட், 2010

நெல் கொள்வனவுக்கு ரூ.3.5 பில்.ஒதுக்கீடு 13 இலட்சம் மெ.தொ. நெல் அறுவடை எதிர்பார்ப்பு






நெல் கொள்வனவுக்கென அரசாங்கம் 3.5 பில்லியன் ரூபாவை ஒதுக்கி இருப்பதாக வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


இந்தியாவின் உதவியுடன்
தற்காலிக களஞ்சியங்கள்
அமைக்கத் தீர்மானம்

இவ்வருடம் 13 இலட்சம் மெற்றிக் தொன் நெல்லை அறுவடை செய்ய முடியுமென மதிப்பிடப்பட்டுள்ளது. அதனால் இந்திய தொழில் நுட்பத்தைப் பெற்று தற்காலிக களஞ்சிய சாலைகளை அமைக்கவும், நெல்கொள்வனவை தொடர்ந்தும் மேற்கொள்ளவும் தீர்மானித்தி ருப்பதாகவும் அவர் கூறினார்.

தற்போது நெல் கொள்வனவுக்கென நாட்டில் 46 மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேவைப்படும் பட்சத்தில் இந்நிலையங்களை மேலும் ஆரம்பிக்கவும் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனநாயக தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரான அனுர குமார திஸாநாயக்க நெல் கொள்வனவு தொடர்பாக எழுப்பிய சிறப்புரிமைக் கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;

நெல் கொள்வனவுக்கென நாம் 46 மத்திய நிலையங்களை ஏற்கனவே அமைத்திருக் கின்றோம். இந்நிலையங்கள் பொலன்னறு வை மாவட்டத்தில் 8, வடமேல் மாகாணத்தில் -10, கிழக்கு மாகாணத்தில் -10, அநுராதபுரம் பிராந்தியத்தில் -9, தெற்கில்- 9 என்றபடி இந்நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையங்கள் ஊடாக இற்றைவரையும் 77 ஆயிரம் மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவ் வருடம் 13 இலட்சம் மெற்றிக் தொன் நெல் விளைச்சலை எதிர்பார்க்கின்றோம்.

ஆனால், ஒரு இலட்சத்து 40 ஆயிரம் மெற்றிக் தொன் நெல்லை களஞ்சியப் படுத்தக்கூடிய களஞ்சிய வசதியே எம்மிடம் உள்ளது. அதனால், உலக உணவு திட்டத்தின் களஞ்சியசாலையைப் பேச்சுவார்த்தை நடாத்தி பெற்றுள்ளோம். அவற்றில் 7 ஆயிரம் மெற்றிக் தொன் நெல்லைத் தான் களஞ்சியப்படுத்த முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக