14 ஆகஸ்ட், 2010

சரத் மீதான நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு : சட்டத்தரணிகள்

இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்படும் என ஜெனரல் சரத் பொன்சேகாவின் சட்டத்தரணிகள் அறிவித்துள்ளனர்.

இராணுவ நீதிமன்றின் தீர்ப்பு பக்கச்சார்பானது என சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தாம் விடுமுறையில் இருந்த காலத்திலேயே அரசாங்கத் தரப்பு சாட்சியங்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகளை நடத்த வேண்டாம் எனக் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அதற்கு இராணுவ நீதிமன்றம் செவிசாய்க்கவில்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இராணுவ நீதிமன்றில் சாட்சியமளித்த ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் லக்ஸ்மன் செனவிரட்ன ஆகியோரிடம் குறுக்கு விசாரணை நடத்தத் தமக்கு சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை என சட்டத்தரணிகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக