14 ஆகஸ்ட், 2010

ரணிலின் தாயார் சுகயீனம்: ஜனாதிபதி நேரில் சென்று பார்வை

சுகவீனமுற்ற நிலையில் கொழும்பு தனியார் ஆஸ்பத்திரியொன்றில் சிகிச்சை பெற்று வரும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தாயாரை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுக்காலை விஜயம் செய்தார்.

ரணில் விக்கிரமசிங்கவின் தாயாரின் சுகதுக்கங்களை விசாரித்தறிந்த ஜனாதிபதி அவர் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் பிரார்த்தித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சரான லக்ஷ்மன் ஜயகொடி தங்கியிருந்து சிகிச்சை பெறும் இடத்துக்கும் சென்று பார்வையிட்டார். பிரதியமைச்சர் லசந்த அழகியவன்னவும் ஜனாதிபதியுடன் சென்றிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக