14 ஆகஸ்ட், 2010

தமிழ்க்கட்சி அரங்கத்தின் ஐந்தாவது கூட்டம் இன்று

ஒன்பது தமிழ்க் கட்சிகள் கூட்டிணைந்த தமிழ்க்கட்சி அரங்கத்தின் ஐந்தாவது கூட்டம் மட்டக்களப்பு ஆளுனர் விடுதியில் இன்று காலை 10.00மணி தொடக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இன்றைய கூட்டம் நடைபெறுகின்றது.

இக்கூட்டத்தில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வி.ஆனந்த சங்கரி உட்பட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் மற்றும் ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எப்., ஈரோஸ் உட்பட ஒன்பது தமிழ்க் கட்சிகளின் பிரதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

எனினும் இக்கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக