18 மே, 2010

மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு






நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் கடந்த சில தினங்களான பெய்து வரும் கடும் மழை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரண நடவடிக் கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜி-15 மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஈரான் சென்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்நாட்டின் தலைநகர் தெஹ்ரானிலிருந்து அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளருடன் தொடர்பு கொண்டு இப் பணிப்புரையை வழங்கி யுள்ளார்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் கடும் மழை காரணமாக அம் மாவட்டங்களில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது. அதேநேரம் தாழ் நிலங்களிலும் வெள்ள நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

இதனடிப்படையில் இம்மூன்று மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கவென அனர்த்த முகாமைத்துவ அமைச்சு பத்து இலட்சம் ரூபா படி நிதியொதுக்கீடு மேற்கொண்டிருக்கின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய எடுக்கப்பட்டிருக்கும் துரித நடவடிக்கைகளின் ஓரங்கமாக ஒதுக்கப்பட்டிருக்கும் இந்நிதி அந்தந்த மாவட்டச் செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சமைத்த உணவு நிவாரணம் மாத்திரமல்லாமல் தேவைப்படும் பட்சத் தில் தற்காலிகமான தங்குமிட வசதிகளை செய்து கொடுக்குமாறும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இந்த அறிவுறுத்தலுக்கு ஏற்பவும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு நிதி யொதுக்கீடுகளை மேற்கொண்டுள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் துரித மாக நிவாரணம் பெற்றுக் கொடுப்பதுடன் வெள்ளப் பெருக்கு அச்சுறுத்தலை குறைப்பதற்காக தாழ் நிலங்களில் தேங்கியுள்ள மழை நீர் வழிந்தோடவென கால்வாய் வசதியை ஏற்படுத்தவென மூன்று மாவட்ட செயலாளர்களுக்கு மேலும் ஒன்பது இலட்சம் ரூபா நிதியொதுக்கீடு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சீரற்ற கால நிலையை கருத்தில் கொண்டு மக்களுக்கு துரித நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அரசாங்கம் அவசர ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக