19 மே, 2010

இன்றும் நாளையும் தேசியக் கொடியைப் பறக்க விடுமாறு அரசு அறிவிப்பு

இராணுவ வெற்றியின் முதலாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இன்று புதன்கிழமையும் நாளை வியாழக்கிழமையும் தேசிய கொடியைப் பறக்கவிடுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.

சுதந்திரத்திற்குப் பின்னர் நாட்டில் உண்மையான சமாதானத்தை ஏற்படுத்திக் கொடுத்த இந்தத் தருணத்தை நினைவுகூரும் வகையிலேயே சகல தனியார், அரச அலுவலகங்கள், வீடுகள் மற்றும் வாகனங்களில் இரண்டு நாட்களும் தேசிய கொடியைப் பறக்க விடுமாறு அரசாங்கத் தகவல்கள் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக