19 மே, 2010

‘4 மணி நேரத்துக்கு முன்னர் விமான நிலையம் வரவும்’ விசேட தொலைபேசி இலக்கமும் அறிவிப்பு






வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகள் குறிக்கப்பட்ட நேரத்திற்கு குறைந்தது நான்கு மணித்தி யாலங்களுக்கு முன்னராவது கட்டு நாயக்கா சர்வதேச விமான நிலை யத்திற்கு வருகை தருமாறு ஸ்ரீலங் கன் எயார் லைன்ஸ் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

கொழும்பு- கட்டுநாயக்கா, கொழும்பு- நீர்கொழும்பு வீதிகளி லும் கட்டுநாயக்கா விமானப் பகுதியிலும் ஏற்பட்டுள்ள போக்கு வரத்து நெரிசலை கருத்தில் கொண்டே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டி ருப்பதாக அந்நிறுவனத்தின் அதிகாரி யொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

அதேநேரம் விமான நேர ஒழுங் குகள் தொடர்பாக அறிய விரும்பும் பயணிகள் 0197335555, 0197332377 என்ற தொலைபேசி இலக்கங் களுடன் தொடர்புகொள்ளுமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக