27 ஏப்ரல், 2010

கொழும்புப் பங்கு பரிவர்த்தனை நிலையத்தின் யாழ். கிளை இன்று திறப்பு

கொழும்புப் பங்கு பரிவர்த்தனை நிலையத்தின் யாழ்.மாவட்டக் கிளை இன்று காலை 9.30 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது.கொழும்புப் பங்குச் சந்தையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நிஹால் பொன்சேகா யாழ்ப்பாணக் கிளையினை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் இலங்கைப் பிணைகள் பிரிவர்த்தனை நிலைய தலைவர் உதயசிறி காரிய வாசம், யாழ்ப்பாண அரசாங்க அதிபர் கே.கணேஷ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட பீடாதிபதி எஸ்.தேவராஜா, முகாமைத்துவ விரிவுரையாளர் பேராசிரியர் என்.நடராஜசுந்தரம், மற்றும் பங்குத்தரகு நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இலங்கையில் 5 ஆவது கிளையாக திறக்கப்பட்டுள்ள இக்கிளையானது ஏற்கனவே 2004 ஆம் ஆண்டு சிறிது காலம் யாழ்ப்பாணர்த்தில் இயங்கி வந்தது. தொடர்ந்து ஏற்பட்ட அசாதரண சூழ்நிலைகாரணமாக மூடப்பட்டது. தொடர்ந்து இன்று முதல் மீண்டும் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை நிலையம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்புப் பங்கு பரிவர்த்தனை நிலையத்தின் கிளை காரியாலயம் யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக 398/1 ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக