27 ஏப்ரல், 2010

விரைவில் செனட் சபையொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை-ராஜித்த சேனாரத்ன.



அரசியலமைப்பு சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும்போது செனட் சபையையும் அமைக்கப்படவுள்ளது. அனைத்து இனத்தவரும் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் வகையில் இதற்கான உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர் என மீன்பிடி மற்றும் நீர் வள துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இனம் மற்றும் மதம் தொடர்பான விடயங்கள் குறித்து ஏதேனும் சட்டமூலமொன்று நாடாளுமன்றில் நிறைவேற்றப்படவேண்டுமாயின் அதற்கு செனட் சபையின் அனுமதி தேவையென்றும்,
செனட் சபையின் பெரும்பான்மை அதிகாரம் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக