24 ஏப்ரல், 2010

மலேசியாவில் கைதான இலங்கையர்களுள் புலி இயக்கத்தினரும் உள்ளடங்குவதாக மலேசிய அரசு தகவல்-





மலேசியாவில் கடந்த சில நாட்களுக்குள் கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கையர்களுள் புலிகள் இயக்க உறுப்பினர்களும் அடங்குவதாக மலேசிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. மலேசியாவில் இடம்பெற்றுவரும் பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் பங்கேற்பதற்காக பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச மலேசியாவிற்கு விஜயம் செய்துள்ளார். பாதுகாப்புச் செயலருக்கும் மலேசிய உள்விவகார அமைச்சர் இஸாமுடின் உஸைனுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போதே மலேசிய உள்விவகார அமைச்சர் இஸாமுடின் உஸைன் குறித்த தகவலைத் தெரிவித்துள்ளார். கடந்த 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்முதல் இவ்வருடம் மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில் 599 இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் மேற்கொள்ளும் சட்டவிரோத குற்றச்சாட்டுக்களை தடுத்துநிறுத்த உடன் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மலேசிய உள்விவகார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக