24 ஏப்ரல், 2010

புதிய வரவு-செலவுத் திட்டத்திற்கு முன் மற்றுமொரு கணக்கு வாக்கெடுப்பு : நிமால் சிறிபால



இந்த வருடத்துக்கான புதிய வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் ஜூலை மாதமளவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதால் அதுவரை மற்றுமொரு கணக்கு வாக்கெடுப்பை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதனைச் செய்வதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் உள்ளன என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமால் சிறிபால டி. சில்வா தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

"எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்றம் மிகவும் வேலைப் பளு மிக்கதாக காணப்படும். இவ்வருடத்துக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் ஜூலை மாதமளவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

அதுவரையான காலத்துக்கு மற்றுமொரு கணக்கு வாக்கெடுப்பை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

அதன்பின்னர் இவ்வருடத்துக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். மேலும் இவ்வருட இறுதியில் அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்படும்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக