24 ஏப்ரல், 2010

பெண்ணிடம் தகாதமுறையில் நடக்க முற்பட்டவருக்கு மூன்றாண்டு சிறை : மல்லாகம் நீதிமன்று



வீதியால் சென்ற பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முற்பட்ட இளைஞருக்கு மூன்று மாதகால சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஏழாலைப் பகுதியில் வீதியால் தனிமையில் சென்று கொண்டிருந்த இளம் பெண்ணை மறித்து, தகாத வார்த்தைப் பிரயோகம் மேற்கொண்டதுடன் தகாத முறையில் நடக்க முற்பட்டதாகக் கூறி சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சம்பந்தப்பட்டவர் முறைப்பாடு செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து சுன்னாகம் பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்தில் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிமன்றத்தில் இளைஞர் குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி மூன்று மாதகால சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அந்நபர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக