9 ஏப்ரல், 2010

. ஈராக்கில் மனித குண்டாக வந்த 10 வயது சிறுவன்

ஈராக் நாட்டில் தீவிரவாதிகள் அடிக்கடி மனித குண்டு தாக்குதல் நடத்தி வருகிறார்கள். ஏதும் அறியாத அப்பாவி சிறுவர்களையும் மனித குண்டுகளாக தீவிரவாதிகள், பயன்படுத்துவது இப்போது தெரியவந்துள்ளது.

ஈராக்கில் உள்ள பலுஜா என்ற இடத்தில் மக்கள் கூட்டம் உள்ள பகுதியை நோக்கி 10 வயது சிறுவன் ஒருவன் வந்தான். அவனது நடவடிக்கைகள் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருந்ததை பார்த்த போலீஸ்காரர் ஒருவர் அவனை அழைத்து விசாரித்தார்.

அப்போது அவனது உடலில் வெடிகுண்டு வைத்து இருப்பதை கண்டு பிடித்தார். உடனே போலீசார் அவனை தனி இடத்துக்கு அழைத்து சென்று வெடி குண்டை உடலில் இருந்து அகற்றினர்.

போலீசார் அவனிடம் விசாரித்தபோது மர்மநபர்கள் சிலர் வெடிகுண்டை கட்டிவிட்டு மக்கள் கூட்டத்தில் வைத்து வெடிக்க செய்யும்படி கூறினார்கள். அதன்படி குண்டை வெடிக்க செய்வதற்காக வந்தேன் என்றான்.

இந்த சிறுவனின் சொந்த ஊர் அமாரியத். அங்கு வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்த அவனை 4 நாட்களுக்கு முன்பு 3 பேர் வேனில் கடத்தி சென்றுள்ளனர்.

பின்னர் அவன் ஆசைப்பட்ட சாக்லேட் போன்ற பொருட்களை வாங்கி கொடுத்து மனித குண்டாக தயார்படுத்தி உள்ளனர்.

குண்டு வெடித்தால் செத்துப்போவோம் என்பது கூட தெரியாமல் அவன் மனித வெடிகுண்டாக மாற சம்மதித்து இருக்கிறான்.

ஈராக்கில் சமீபத்தில் நடந்த 2 மனிதகுண்டு தாக்குதலிலும் தீவிரவாதிகள் சிறுவர்களையே பயன்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக