9 ஏப்ரல், 2010

கையொப்பமில்லாமல் வாக்களிக்கப்பட்ட தபால்மூல வாக்காளர் அட்டைகள்?

மன்னார் அரச பேருந்துசாலையில் நடத்தப்பட்ட தபால்மூல வாக்களிப்பின்போது பயன்படுத்தப்படாத வாக்காளர் அட்டைகள் உரியவர்களின் கையொப்பமில்லாமல் வாக்களிக்கப்பட்டு தேர்தல் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் தனக்கு முறைப்பாடு கிடைத்ததாகவும் உடனடியாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கவுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியதாகவும் த.தே.கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக