8 ஏப்ரல், 2010

அக்கறைப்பற்றில் சற்றுமுன்னர் மோதல் சம்பவம்

அக்கறைப்பற்று ஆளையடிவேம்பு பகுதியில் சற்றுமுன்னர் இரு குழுக்களிடையே மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தேர்தலின் பின்னரான வன்முறைகள் நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்றுள்ளதாக கண்காணிப்பாளர்கள் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தனர்.

இதேவேளை, நாவலப்பிட்டியவில் தொடர்ந்தும் பதற்ற நிலை காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலான வாக்கெடுப்பு நிலையங்களில் கள்ளவாக்குகள் அளிக்கப்பட்டதாகவும் அதனால் குறிப்பிட்ட வாக்கெடுப்பு நிலையங்களின் முடிவுகளை இரத்துச் செய்யுமாறும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் 15 பேரை தாம் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக