9 ஏப்ரல், 2010

யாழ். மாவட்டத்தில் 19 வீத வாக்களிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் 19 வீதம் மக்களே பொதுத் தேர்தலில் வாக்களி த்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காலை ஏழு மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமானதிலிருந்து வாக்களிக்கச் செல்வதற்கு மக்கள் ஆர்வம்காட்டவில்லை யென்றும் நண்பகலுக்குப் பின்னரே மிகக் குறைவானோர் வாக்களித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

யாழ். மாவட்டத்தில் 9 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 7, 21, 325 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்தனர். இவர்கள் வாக்களிக்கவென 621 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட் டிரு ந்தன.

பன்னிரண்டு அரசியல் கட்சிகளும் 15 சுயேச்சைக் குழுக்களுமாக 324 வேட் பாளர்கள் களமிறங்கியிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக