9 ஏப்ரல், 2010

அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்த அகதிகள் படகு மடக்கி பிடிப்பு; 99 பேருடன் சிக்கியது

இலங்கை அகதிகளும் உள்ளடங்கியிரு க்கலாம் என நம்பப்படும் 99 பேரைக் கொண்ட மற்றுமொரு சட்ட விரோத படகு ஒன்று, நேற்று அவுஸ்திரேலிய கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது கெவின் ரூட் பிரதமராக பதவியேற்றதன் பின்னர் அவுஸ்திரே லியாவுக்குள் பிரவேசித்த 105 வது சட்ட விரோத படகு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கிறிஸ்மஸ் தீவில் 2040 அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களும் கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் படகு கடந்த ஐந்து நாட்களுக்குள் அவுஸ்திரேலியாவுக்கு வந்த நான்காவது படகு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அவுஸ்திரேலியாவுக்குள் கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் பிரவேசித்த 856 இலங்கையர்களுள் 113 பேருக்கு அவுஸ்திரேலியாவில் வதிவிட விசா வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக