9 ஏப்ரல், 2010

யாழ். மாவட்டத்தில் அமைச்சர் டக்ளஸணுக்கு அதிகூடிய விருப்பு வாக்குகள்


யாழ். மாவட்ட தேர்தல் தொகுதியில் அதிகூடிய விருப்பு வாக்கு ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கிடைத்துள்ளது. அவருக்கு கிடைத்துள்ள விருப்பு வாக்கு 28 ஆயிரத்து 585.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் யாழ். மாவட்டத்தில் ஈபிடிபி போட்டியிட்டு மூன்று ஆசனங்களை பெற்றுள்ளது. யாழ். மாவட்ட ஈபிடிபி அமைப்பாளர் சில்வேஸ்த்திரி அலென்ரீன் உதயன், (13128) முன்னாள் யாழ். எம்.பி. முருகேசு சத்திரகுமாரும் (8105) தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் ஐவர் தெரிவாகியுள்ளனர். மாவை சேனாதிராசா (20501), சுரேஷ் பிரேமச்சந்திரன் (16425) அப்பாத்துரை விநாயகமூர்த்தி (15311), ஆர். சரவணபவன் (14961) சிவஞானம் சிறிதரன் (10057) ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் துணைவியார் திருமதி விஜயகலாவும் (7160) பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 19 சதவீத வாக்களிப்புகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக