9 ஏப்ரல், 2010

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நாமலுக்கு அதிகூடிய வாக்குகள்

நிமால், ஜோன், பவித்திராவுக்கும் விருப்பு வாக்குகள் அதிகம்
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஐ.ம.சு.மு. சார்பில் போட்டியிட்ட நாமல் ராஜபக்ஷ ஒரு இலட்சத்து 47 ஆயிரத்து 566 அதிகப்படியான வாக்குகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

முதன் முதலாகத் தேர்தலில் போட்டியிட்ட இவர் இவ்வளவு பெருந்தொகை வாக்குகளைப் பெற்றிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதேவேளை, பதுளை மாவட்டத்தில் போட்டியிட்ட அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஒரு இலட்சத்து 41 ஆயிரத்து 990 வாக்குகளைப் பெற்றுள்ளார். இதே மாவட்டத்தில் போட்டியிட்ட மஹிந்த சமரவீர என்பவர் ஒரு இலட்சத்து 5 ஆயிரத்து 414 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட்ட அமைச்சர் ஜோன் செனிவிரட்ன, பவித்திரா வன்னி ஆராய்ச்சி ஆகியோர் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

அமைச்சர் ஜோன் செனவிரட்ன ஒரு இலட்சத்து 25 ஆயிரத்து 816 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி ஒரு இலட்சத்து 10 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் வேட்பாளர் பட்டியலில் போட்டியி ட்ட இரு சிரேஷ்ட அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறு ப்பினர்கள் போட்டியிட்டும் வேட் பாளர் பட்டியலில் இள வயதுடைய நாமல் ராஜபக்ஷ இந்த வெற்றியை பெற்றுள்ளமையானது நாமல் ராஜப க்ஷவின் அரசியல் பிரவேசத்தை மக்கள் ஏற்றுள்ளார்களென்றே தெரி கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக