23 மார்ச், 2010

சகல குடும்பங்களுக்கும் ஒருவீடு, மின்சாரம் கிடைக்கும் வகையில் பொருளாதார மாற்றம் ஏற்படும்




மீரிகம கூட்டத்தில் பசில் ராஜபக்ஷ

அனைத்து குடும்பங்களுக்கும் ஒரு வீடு, மின்சாரம், வீதிகள், தொழில் ஆகியவை கிடைக்கும் வகையில் நாட்டில் பொருளாதார மாற்றம் ஏற் படும். ஆறு வருடங்கள் எதிர்வரும் ஆறு வருடங்களாகத்தான் இருக்கும் என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஐ. ம. சு. முன்னணியின் கம்பஹா மாவட்ட தலைமை வேட்பாளருமான பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மீரிகம தேர்தல் தொகுதியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் (22) மீரிகமயில் நடை பெற்றது. அதில் கலந்துகொண்டு விசேட உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

எமது ஜனாதிபதியிடம் நான் காணும் விசேடத்துவம் யாருக்கும் முடியாது என்று கூறுவதை தான் செய்து முடிப்பதாகும். புலிகளை யுத்தத்தில் வெல்ல முடியாது என்று எங்கள் நாட்டில் மட்டுமன்றி உல கில் பிரபல நாடுகளின் தலைவர்கள் கூட கூறி வந்தனர்.

பிரச்சினையை தீர்க்க மாற்று வழி களை கண்டறியுமாறும் அவர்கள் ஆலோசனை வழங்கினர். அவற்றை எல்லாம் புறக்கணித்துவிட்டுத்தான் ஜனாதிபதி தனது தீர்வை அறிமுகப் படுத்தினார். அதில் வெற்றியும் பெற்றார்.

மற்றொரு சவால் 1977 இன் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட திற ந்த பொருளாதார முறையாகும். எங்கள் நாட்டில் உள்ள சிலரைப் போன்றே உலகிலுள்ள ஏனைய நாடுகளும் திறந்த பொருளாதார முறையில் இருந்து விடுபட்டு முன்செல்ல எந்த நாட்டுக்கும் முடி யாது என்று கூறிவந்தனர். அவை அனைத்தையும் முழுமையாக மாற்றி ஜனாதிபதி கடந்து சென்ற 5 வருடங்களில் தேசிய கைத்தொழிலை சக்தி மிக்கதாக மாற்றும் தேசிய பொருளாதார த்தை கட்டியெழுப்பி னார்.

ஜே. ஆர். ஜயவ ர்த்தனாவின் அரசியல மைப்பின் படி இந்த நாட்டில் எவருக்கும் 2/3 அதிகாரத்தை பெற முடியாது என்று அனைவரும் கூறுகின் றனர். எனினும் யாருக்கும் பெற முடியாது எனக் கூறும் 2/3 அதி காரத்தை இம்முறை இந்த நாட்டின் சரித்திரத்தில் முதல் முறையாக எமது ஜனாதிபதி பெற்றுக் கொள்வார். அந்த முறையை மாற்றுவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதால் அவ்வாறான அதிகாரம் கிடைக்கும் இறுதி சந்த ர்ப்பமும் இதுவாகத்தான் இருக்கும். 2/3 அதிகாரம் அல்ல 3/4 அதிகாரத்தைப் பெறவே ஜனாதிபதி முய ற்சி செய்கிறார்.

மஹிந்த சிந்தனை கொள்கைத் திட்டத்தை விட மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கினை செயற்படுத் துவது கடினமான காரியமாகும். எனினும் எத்தகைய சிரமங்கள் வந் தாலும் மக்களுக்காக சேவை செய்வதற்காக அர்ப்பணிப்புடன், அக்கறையுடன் செயற்படும் நாட் கள், அதனை எப்படியும் நடை முறைப்படுத்துவோம். சக்தி மிக்க பாராளுமன்ற அதிகாரத்துடன் அரசை நியமிக்கும் பொறுப்பு மக்களுக்கே உள்ளது. அந்த பொறு ப்பை நீங்கள் செவ்வனே நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்று பசில் ராஜபக்ஷ மேலும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக