23 மார்ச், 2010

ஓமந்தைச் சோதனைச் சாவடியில் ஆயுதங்களுடன் மூவர் கைது


Top global news update
வவுனியா ஓமந்தைச் சோதனைச் சாவடியில் சட்டவிரோத ஆயுதங்களுடன் சந்தேகநபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்றுமாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பொலீஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். ஓமந்தைச் சோதனைச் சாவடியில் வைத்து சந்தேகத்திற்கிடமான லொறியொன்றினைச் சோதனையிட்டபோது இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குறித்த லொறியிலிருந்து கைத்துப்பாக்கி ஒன்றுடன் ரவைகள் சிலவும் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்போது கைதுசெய்யப்பட்ட குறித்த நபர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலீஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயக்கொடி மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக