23 மார்ச், 2010

ஐ.நா செயலர் நியமிக்கவுள்ள நிபுணர்கள் குழுவுக்கு சீனா ரஷ்யா ஆகியன எதிர்ப்பு-




இலங்கையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் யுத்தகுற்றங்களை ஆராய ஐ.நா செயலர் பான்கீ மூன் நியமிக்க உத்தேசித்துள்ள நிபுணர்கள் அடங்கிய குழுவுக்கு சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இந்த இரு நாடுகளும் ஐ.நாவின் பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கின்றன. பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் கடுமையான அழுத்தங்கள் காரணமாக ஐ.நா செயலர் அமைக்கவுள்ள இக்குழு தொடர்பில் இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக ரஷ்ய பிரதமர் விளடீமீர் புட்டின் மற்றும் சீன தலைவர்கள் தெரிவித்துள்ளதாக அரச உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன. பான்-கீ-மூன் குறித்த நிபுணர்கள் குழுவை அமைத்து அதன் அறிக்கையை பாதுகாப்புச் சபையில் சமர்ப்பித்தால், சீனாவும் ரஷ்யாவும் தமது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அதனை தடுக்குமெனவும் கூறப்படுகிறது. அதேவேளை ஐ.நா செயலரின் இந்த செயற்பாடு குறித்து அணிசேரா நாடுகளின் தலைமை பொறுப்பை வகிக்கும் எகிப்து ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கும் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக