23 மார்ச், 2010

புளொட் வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள்-






பொதுத் தேர்தலில் நங்கூரம் சின்னத்தில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) வேட்பாளர்களான புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான பிரதிநிதிகள் வன்னிப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். புளொட் தலைவர்.திரு.த.சித்தார்த்தன், புளொட் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் க.சிவநேசன் (பவன்), புளொட் முக்கியஸ்தரும் முன்னார் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினருமான வை.பாலச்சந்;திரன், புளொட் வேட்பாளர் திருவருட்செல்வன், புளொட் முக்கியஸ்தரும் வவுனியா நகரசபை எதிர்க்கட்சித் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன், புளொட் முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மேற்படி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மூன்று நாட்களாக புளொட் வேட்பாளர்கள் வவுனியா புதிய சின்னக்குளம் பூம்புகார், ஊர்மிளா கோட்டம், கூமாங்குளம் உள்ளிட்ட பிரதேசங்களில் மக்களைச் சென்று சந்தித்து வருவதுடன், பொதுக்கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இவை தொடர்பிலான நிழற்படங்கள் இங்கு தரப்படுகின்றன.
















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக