23 மார்ச், 2010

5 தடவைகள் பின்லேடனை, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சந்திக்க ஏற்பாடு செய்தேன்

5 தடவைகள்பின்லேடனை, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சந்திக்க ஏற்பாடு செய்தேன்பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி தகவல்சர்வதேச பயங்கரவாதி பின்லேடனை பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் 5 முறை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்தேன். அப்போது அவர் வளர்ச்சிப்பணிகளுக்காக ரூ.50 கோடி தரும்படி கேட்டார் என்று பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ.யின் முன்னாள் அதிகாரி காலித் காஜா தெரிவித்தார்.

உறவு இருப்பதை மறுத்த பாகிஸ்தான்

பாகிஸ்தானின் உளவுத்துறைக்கும் தடை செய்யப்பட்ட அல்கொய்தா இயக்கத்துக்கும் உறவு இருக்கிறது என்று சொல்லப்பட்ட போது எல்லாம் அதை பாகிஸ்தான் மறுத்து வந்தது. ஆனால் அப்படி உறவு இருப்பதை ஐ.எஸ்.ஐ. இயக்கத்தின் முன்னாள் அதிகாரி ஒருவரது பேட்டியே உறுதிப்படுத்தி உள்ளது. அந்த அதிகாரியின் பெயர் காலித் காஜா.

இவர் ஒரு தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் பின்லேடனை சந்திக்க ஏற்பாடு செய்யும்படி முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் என்னை கேட்டுக்கொண்டார். அதன்படி அவரை சந்திக்க 5 முறை ஏற்பாடு செய்தேன் என்றும் 3 முறை இந்த சந்திப்புகள் சவுதி அரேபியாவில் நடந்தன என்றும் அவர் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:-

ரூ.50 கோடி கேட்டார்

உலகம் முழுவதும் உள்ள பல்வேறு இஸ்லாமிய இயக்கத்தலைவர்களை நவாஸ் ஷெரீப் சந்தித்தார். பின்லேடனையும் அவர் சந்தித்தார். 5 முறைகள் அவர்கள் சந்தித்தார்கள். ஒரு முறை சந்தித்த போது வளர்ச்சிப்பணிகளுக்கு 50கோடி ரூபாய் பணம் வேண்டும் என்று நவாஸ் ஷெரீப் கேட்டார். அந்த அளவுக்கு பணம் பின்லேடன் கொடுக்கவில்லை. மிகக்குறைந்த தொகையை அவர் கொடுத்தார்.

சவுதி அரச குடும்பத்தினரையும் சந்திக்க வேண்டும் என்று நவாஸ் ஷெரீப் விரும்பினார். அதற்கும் ஏற்பாடு செய்து கொடுத்தேன்.

பெனாசிரை தூக்கி எறிவதற்காக

பிரதமர் பதவியில் இருந்து பெனாசிரை தூக்கி எறிவதற்காக பஞ்சாப் மாநில முதல் மந்திரியிடம் கொடுக்கும்படி என்னிடம் பின்லேடன் பணம் கொடுத்தார். அந்த பணத்தை அப்போது பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பிடம் நான் கொடுத்தேன். பெனாசிரை பிரதமர் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்பதற்காக இந்த பணம் கொடுக்கப்படுவதாக நான் அப்போது அவரிடம் தெரிவித்தேன்.

நான் பின்லேடனுடன் நெருக்கமான தொடர்பு வைத்து இருந்தேன். எனக்கு கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டதால் நான் பாகிஸ்தானை விட்டு 1987-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் சென்றேன். பின்லேடன் இயக்கத்தினருடன் சேர்ந்து ரஷிய ராணுவத்தை எதிர்த்து யுத்தம் செய்தேன்.

இவ்வாறு காலித் காஜா தெரிவித்தா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக