23 மார்ச், 2010

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டு கொலை; பணம் கொள்ளை






ஆந்திரமாநிலம் ஐதராபாத்தில் உள்ள தில் குஷ்நகரை சேர்ந்தவர் பிரசாந்த் கோய்னாகா (28). கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர் அமெரிக்கா சென்றார்.

அங்கு கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கன்னிவால் இண்டர் நேஷனல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்து வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் இவர் ஒகிலாமா நகரில் உள்ள ஒரு கடையில் பகுதி நேர ஊழியராக வேலைக்கு சேர்ந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு 7.15 மணியளவில் அங்கு வாடிக்கையாளர் போன்று 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் கடையில் இந்த பணத்தை கொள்ளையடித்தனர்.

இதைபார்த்த பிரசாந்த் அவர்களை தடுக்க முயற்சி செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் பிரசாந்தை துப்பாக்கியால் சுட்டனர். குண்டு பாய்ந்து அவர் அதே இடத்தில் உயிரிழந்தார். இதற்கிடையே பணத்தை கொள்ளையடித்து விட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இச்சம்பவம் குறித்து ஒகிலாமா நகர போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, பிரசாந்த் கொலை செய்யப்பட்ட விவரம் ஐதராபாத்தில் உள்ள அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை ஒகிலாமா போலீசாரும், இந்திய தூதரகமும் செய்து வருகிறது. இந்த தகவலை வட அமெரிக்க தெலுங்கு அசோசியேஷன் துணை தலைவர் பிரசாத் தொடகுரா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக