23 மார்ச், 2010

அப்பாவின் காரை கிளப்பி 5 கி.மீ. ஓட்டிய பொடியன்

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update

லண்டன் இங்கிலாந்தில் அப்பாவின் காரை கிளப்பி 5 கி.மீ. ஓட்டிச் சென்றான் 5 வயது பொடியன். சில விபத்துகளை ஏற்படுத்தி சுவரில் மோதி நின்றது கார்.
இங்கிலாந்தின் டாங்மேர் என்ற இடத்தில் அப்பாவின் மிட்சுபிஷி ஷோகன் சொகுசு காரை யாருக்கும் தெரியாமல் கிளப்பினான் 5 வயது பொடியன். ஷெட்டில் இருந்து வெளியே வந்து நெடுஞ்சாலையை நோக்கி பறந்தது கார். அதை கவனித்தவர்கள் டிரைவர் இல்லாமல் கார் ஓடுவதாக நினைத்தனர். சிலருக்கு பொடியனின் தலை மட்டும் தெரிந்தது.
உடனடியாக போலீசுக்கு சிலர் தகவல் கொடுத்தனர். அதே நேரம் தனது 5 வயது மகனையும் காரையும் காணவில்லை என பொடியனின் தந்தை போலீஸிடம் புகார் தெரிவித்தார்.
உடனே போலீஸ் வேன்இ ஆம்புலன்ஸ் ஆகியவை பொடியனின் காருக்குப் பின்னால் விரைந்தன. அதற்குள் 3 கார்களில் மோதிய பொடியன்இ ஒரு பைக் ஓட்டுநரையும் இடித்து தள்ளி விட்டு பயணத்தைத் தொடர்ந்தான். ஆனால்இ குறைந்த வேகத்தில் கார் சென்றதால் யாருக்கு காயம் ஏற்படவில்லை.
5 கி.மீ.க்கு மேல் சவாரி செய்த சிறுவன்இ கடைசியில் கார் கட்டுப்பாட்டை இழந்து சுவரில் இடித்து நின்றது. அக்கம்பக்கத்தினர் ஓடிச் சென்று கதவைத் திறந்தனர். 5 வயது பொடியன் அழுதபடி டிரைவர் சீட்டில் உட்கார்ந்திருந்ததைக் கண்டு அதிர்ந்தனர்.
உடனடியாக அவனை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அவனுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்று டாக்டர்கள் சான்றளித்த பிறகுஇ பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான்.
சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில்இ ‘‘பாதசாரிகளும்இ வாகன ஓட்டிகளும் அதிர்ஷ்டவசமாக தப்பினர். குறைந்த வேகத்தில் கார் சென்றதால் விபத்துகளில் பொடியனுக்கும் காயம் ஏற்படவில்லை’’ என்றார்.
இதுகுறித்து சிறுவனின் தந்தையை எச்சரித்த போலீசார்இ விசாரணையைத் தொடர்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக