1 மார்ச், 2010

களனிக்குள் வரக் கூடாது என்று சொல்வதற்கு மேர்வின் சில்வா யார் ? அநுரகுமார


எம்மை களனிக்கு வர விடமாட்டேன் என்று சொல்வதற்கு மேர்வின் சில்வாவிற்கு உரிமையோ தகுதியோ இல்லை என ஜே.வி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்கா தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் மேடையில் தோன்றி ஐக்கிய தேசியக் கட்சி களனியில் பிரச்சாரம் நடத்தலாம் எனவும் ஆனால் அன்னம் கட்சியை களனிக்குள் அனுமதிக்கப் போவதில்லை எனவும் மேர்வின் சில்வா தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளித்த அநுரகுமார அரசாங்கத்தின றவுடிக் கும்பலின் அச்சுறுத்தலுக்குப் பயப்படுபவர்கள் நாம் அல்ல என்றும் திட்டமிட்படி தமது தேர்தல் நடவடிக்கைகள் களனியிலும் இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக