1 மார்ச், 2010

பிரித்தானிய அரசுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்



கொழும்பில் ஆர்ப்பாட்டம்
உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் பிரித்தானிய வெளிவிவகாரத்துறை அமைச்சர் மிலி பாண்ட் கலந்து கொண்டமையையும், பிரித்தானிய பிரதமர் கோடன் பிரவுண் அந்த அமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சுக்கள் நடத்தியதையும் கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றிருக்கின்றது.

பிரித்தானிய தூதரகத்தின் எதிரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை அரச ஆதரவுக் கட்சியாகிய தேசிய சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்திருந்தது. அந்த முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தலைமையில் நூற்றுக்கணக்கானவர்கள் இதில் கலந்து கொண்டு எதிர்ப்பு கோஸங்களை எழுப்பினார்கள்.

இங்கு செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச வேறொரு நாட்டின் பிரிவினைவாதிகளுக்கு பிரித்தானியாவின் தலைவர்கள் உதவி செய்வதைத் தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுப்பதாகக் கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக