27 செப்டம்பர், 2009

மீள்குடியேற்றத்திற்கு சவாலாக இருப்பது நிலக்கண்ணிகளும் மிதிவெடிகளுமே

தெரிந்து கொண்டே மரணப்பிடிக்குள்

மக்களை தள்ளிவிட முடியாது

“இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியமர்த்தும் நட வடிக்கைகளுக்கு பெரும் சவாலாக இருப்பது நிலக் கண்ணி வெடிகளும், மிதிவெடிகளுமே. தெரிந்து கொண்டே மக்களை மரணத்தின் பிடிக்குள் தள்ளிவிட எம்மால் முடியாது. படிப்படியாக மீளக்குடியமர்த்தும் நடவடிக்கை களை அரசாங்கம் நடத்தியும் வருகிறது” என பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கா தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 64வது பொதுச் சபை கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக அமெ ரிக்கா சென்றுள்ள பிரதமர் ரத்னசிறி விக் கிரமநாயக்கா, அங்கு நடைபெற்ற ஆசிய சங்கத்தின் கூட்டத் தில் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்ட வாறு கூறினார்.

இந்தக் கூட்டத்தில் அவர் சிங்களத்தில் உரை யாற்றினார். பிரதமர் தொடர்ந்தும் உரையாற்று கையில் கூறியதாவது,

எனது தாய்நாடு மூன்று தசாப்தங்களாக பயங் கரவாதப் பிரச்சினையில் சிக்கித் தவித்துக் கொண் டிருந்தது. அதனை எவ்வாறு எமது நாட்டிலிரு ந்து துடைத் தெறிந்தது என்பதையும் உலகுக்கு காட்டிவிட்டோம்.

அமெரிக்க புலனாய்வுப் பிரிவினர் கூட புலிகள் இயக்கம் உலகிலேயே பலம்வாய்ந்த பயங்கர அமைப்பு என கூறியிருந்தது.

புலிகளை எவராலும் தோற்கடிக்கச் செய்ய முடியாது என்ற எண்ணங்கள் உருவாக்கப்பட்டு சிலர் புலிகளை உயரிய ஸ்தானத்தில் வைத்துக் கொண்டிருந்தார்கள். இவ்வாறான ஒரு இயக் கத்தை தவிடுபொடியாக்கி தோற்கடித்தோம்.

இதற்கென சமாதானத்தை விரும்புகின்ற மக் களும், உலகத் தலைவர்களும், அங்கு வாழுகி ன்ற மக்களும் எமக்கு பல்வேறு வழிகளில் உத விகளை செய்தார்கள்.

இடம்பெயர்ந்துள்ள மக்களை மீண்டும் அவர் களது சொந்த மண்ணில் குடியமர்த்தும் நடவடி க்கைகளை துரிதமாக செய்து வருகிறோம்.

வவுனியா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திரு கோணமலை பகுதியிலுள்ள மக்களை மீளக்குடி யமர்த்திவிட்டோம். குறுகிய நாட்களுக்குள் இவ ர்களை மீளக்குடியமர்த்தியது அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன்.

என்றாலும், இதற்கு தடையாக இருப்பது பயங்கரவாதிகளால் புதைக்கப்பட்டுள்ள நிலக் கண்ணிவெடிகளும், மிதிவெடிகளுமே. மக்கள் குடியிருப்பு பகுதிகளில் விளை நிலங்களில் மிதி வெடிகள் மரணத்தின் சாயலில் புதைந்து கிட க்கின்றன.

தெரிந்து கொண்டே அப்பாவி மக்களை மர ணத்தின் பிடிக்குள் எங்களால் தள்ளிவிட முடி யாது.

வடக்கில் நிலக்கண்ணிவெடிகள், மிதிவெடிகள் அகற்றும் நடவடிக்கைகள் துரிதமாக நடைபெ ற்று கொண்டிருக்கின்றன. இதில் அரச சார்பற்ற நிறுவனங்களும் செயற்படுகின்றன. இராணுவம் பெருந்தொகையான மிதிவெடிகளை அகற்றி யுள்ளன. நிலக் கண்ணிவெடி, மிதிவெடிகள் அகற்றுவதற்காக நவீன ரக இயந்திரங்களையும் அரசாங்கம் கொண்டுவந்துள்ளன.

உலக ரீதியாக எங்களுக்கு இரண்டு பிரதான சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக் கின்றது. சுற்றாடல் மாசடைவது ஒரு சவாலாக வும், பயங்கவாதம் இன்னுமொரு சவாலாக வும் இருக்கிறது.

ஒற்றுமை, ஒத்துழைப்பு, செயற்படுதல் என்ப தன் ஊடாக இந்த சவால்களை வெற்றிகொள்ள முடியும் என்பதை இந்த இடத்தில் கூற விரு ம்புகிறேன். இதற்கென ஒருங்கிணைந்து செயற் பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். எதிர்காலத்தில் சிறந்த உலகத்தை காண்பதற்கு இவை உறுதுணையாக இருக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக