27 செப்டம்பர், 2009

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மனிக்பாம் முகாமிற்கு விஜயம்







இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் வவுனியா மனிக்பாம் நலன்புரி நிலையத்திற்கு நேற்று விஜயம் செய்துள்ளார்.வவுனியா மனிக்பாம் நலன்புரி நிலையத்தில் மக்களின் தேவைகள் மற்றும் நலன்கள் குறித்து வவுனியா அரச அதிபர் திருமதி சாள்ஸ் மற்றும் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

மேலும் இச்சந்திப்பின் போது பருவகாலங்களில் ஏற்படும் வெள்ள அபாயங்களை தடுக்கும் பொருட்டு அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள வேளைத்திட்டம் குறித்து தெளிப்படுத்தியுள்ள அவர் .மேலும் இடம்பெயர் மக்களின் மீள்குயேற்றம் தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளார்.

இந்த விஜயத்தின் போது மனிக்பாம் நலன்புரி நிலையத்தில் உள்ள 100 பாடசாலை மாணவர்களுக்கு இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட கல்வி கற்க தேவையான பொருட்கள் ஆலோக் பிரசாத்தினால் பகிர்தளிக்கப்பட்டது. மேலும் அவர் கதிர்காமர் கிராமத்தில் அமைந்துள்ள கோவிலுக்கு சென்று வழிபாடுகளிலும் ஈடுப்பட்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக