27 செப்டம்பர், 2009

வடக்கின்; அபிவிருத்தி திட்டம் பெரும் வெற்றி.முன்னேற்ற கூட்டத்தில்; அதிகாரிகளுக்கு பாராட்டு













அரசாங்கம் வடக்கில் பயங்கரவாதத்தை
ஒழித்துஜனநாயகசூழலை ஏற்படுத்திவருவதுடன்,வடமாகாணத்தின் அபிவிருத்தியில் அதி கூடிய கவனத்தை செலுத்திவருவதாக வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் கூறினார்.

வடக்கின் வசந்தம் மற்றும் 180 நாள் அபிவிருத்தி திட்டம்,மாவட்டங்களின் ;கமநெகும கிராம எழச்சி திட்டம் பற்றி ஆராயும் மீளாய்வு கூட்டம் வவுனியா அரசாங்க அதிபர் பணிமனை கேட்போர் கூடத்தில் இன்று (2009.09.26)இடம் பெற்றது.

தற்போதை சூழலில் அரசாங்கம் வடக்கின் ;வசந்தம அபிவிருத்தி திட்டத்தின் மூலம் முழுமையான தமது வேலைத் திட்டங்களை முன்னெடுத்துவருகின்றது.குறிப்பாக கட்டிட நிர்மாணப்பணிகளுக்கு அதி கூடிய கவனத்தை செலுத்தி அப்பணிகளை விரைவுபடுத்திவருகின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும்.ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும்; பாராளுமன்ற உறுப்பினருமான பெஷில் ராஜபக்ஷவின் நெரடி கண்கானிப்பின் கீழும் இப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

பயங்கரவாத செயற்பாடுகளால் சேதமான கட்டிடங்களை மீள்கட்டுமானம்ணீ செய்யும் பணிகள் செவ்வனே இடம் பெறுகின்றது.முன்பள்ளி பாடசாலைகள்,பாடசாலைகள்,வைத்தியசாலைகள்,பலநோக்கு கூட்டுறவு சங்க கடைகள்,உள்ளிட்ட அரச திணைக்களங்களின் புனரமைப்பகளும் அவற்றில் சிலவாகும்.

மக்களின் மிகவும்; அடிப்படை தேவைகளுல் பாதை,மின்சாரம்,குடிநீர் திட்டங்கள் என்பனவும் முன்னுரிமையடிப்படையில் வழங்கபட்டுவருகின்றது.

இப்பணிகளை அரசாங்கம் மன்னெடுக்கின்ற போது.அதனை மிகவும் துரிதமாக முன்னெடுப்பதில் வடமாகாண அரச திணைக்களங்களின் அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கிவருவதற்கு எமது பாராட்டுக்களை தெரிவித்துக் கணடள்கின்றேன் என்றும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் கூறினார்.

இந்த கூட்டத்தில் வடமாகாண ஆளுநர் ஜீ..சந்திர சிறி,மன்னால் பொலீஸ் மா அதிபர் சந்திரா பெர்ணாண்டோ,வவுனியா.மன்னார்,முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்கள் உட்பட திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக