2 ஏப்ரல், 2011

தனியார்துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க திட்டம் அடுத்த மாதம் உத்தியோகபூர்வ அறிவிப்பு




தனியார் துறை ஊழியர்களுக்கான ஓய்வூதியத்திட்டம் அடுத்த மாதம் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட வுள்ளதாக தொழிலமைச்சு தெரிவித்தது.

தொழிலமைச்சின் செயலாளர் மஹிந்த மடிஹேலா இது தொடர்பில் தெரிவிக்கை யில், மேற்படி ஓய்வூதியத்திட்டத்திற்கான ஆவணங்கள் தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆய்வுகளுக்கு உட்படுத் தப்பட்டு வருவதுடன் மே மாதம் அதனைச் சட்ட மூலமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.

அரசாங்க ஊழியர்களுக்கான ஓய்வூதியம் போன்று தனியார் துறையினருக்கும் ஓய்வூதியம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பான நடவடிக்கைகள் துரிதப் படுத்தப்படுமென அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அறிவித்திருந்தார்.

இதற்கமைய தொழிலமைச்சு மேற்படி தனியார்துறை ஓய்வூதியம் தொடர்பான ஆவணங்களைத் தயாரித்துள்ளதுடன் இதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நிதியமைச்சுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகிறது. அடுத்த மாதத்தில் இது தொடர்பான அறிவித்தல் வெளியிடப்படுமெனவும் தொழிலமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக