2 ஏப்ரல், 2011

இலங்கைப் பணிப் பெண்ணுக்கு கட்டாரில் ஒருவருட சிறை

கட்டாரில் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் புரிந்த இலங்கைப் பெண்ணொருவருக்கு 11, 000 கட்டார் றியால்களை திருடிய குற்றச்சாட்டு காரணமாக ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அப்பெண் பணியாற்றிய வீட்டு எஜமானி கட்டார் பொலிஸாரிடம் தெரிவித்த முறைப்பாட்டையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

தனது கைப்பையிலிருந்து இப்பணத்தை பணிப்பெண் திருடியதாகவும் கடந்த வருடம் மார்ச் 6 ஆம் திகதி இச்சம்பவம் நடைபெற்றதாகவும் இம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பணிப்பெண்ணின் அறையிலிருந்து 8000 றியால்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

39 வயதான இப்பணிப்பெண் குறித்த வீட்டில் தொழில் பெற்றுச் சென்று ஒருமாத காலத்தில் இச்சம்பவம் இடம்பெற்றிருந்தது. தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த பணிப்பெண் குப்பையிலிருந்தே பணப்பையை கண்டெடுத்ததாகவும் அவர் கூறினார்.

எனினும் வீட்டு உரிமையாளரின் முறைப்பாடு நம்பகமானது என கண்டறிந்த டோஹா நீதிமன்றம் மேற்படி பணிப்பெண்ணுக்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதித்ததுடன் தண்டனை முடிந்தவுடன் அவர் நாட்டை விட்டு வெளியேறவேண்டுமென என உத்தரவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக