2 ஏப்ரல், 2011

கீரிமலை ஆலய வளவினுள் ஆணின் சடலம் மீட்பு

வலி. வடக்குப் பிரதேசத்திலுள்ள கீரிமலைப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் நேற்று முன்தினம் மாலை இளவாலைப் பொலிஸாரால் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய வளவினுள் வெட்டுக்காயங்களுடன் இளம் வயதுடைய ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக இளவாலைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயமாக நீண்டகாலமாக இருந்த இப் பிரதேசத்தில் சில மாதங்களுக்கு முன்பே மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக