2 ஏப்ரல், 2011

உணவுப் பாதுகாப்பு திட்டத்துக்கு ஜப்பான் ரூ. 468 மில்லியன் உதவி






இலங்கையின் உணவு பாதுகாப்புச் செயற்திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கம் 468 மில்லியன் ரூபா நிதியை வழங்குகின்றது.

இது தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்து நிகழ்வு நிதியமைச்சில் நடைபெற்றதுடன் ஜப்பானிய அரசாங்கத்தின் சார்பில் இலங்கைக்கான ஜப்பானிய உயர் ஸ்தானிகர் குனியோ டகாஸியும் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நிதி திட்டமிடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.பி. ஜயசுந்தரவும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு ஆவணங்களைப் பரிமாறிக் கொண்டுள்ளனர். குறைந்த வசதிகளைக் கொண்ட விவசாயிகளுக்கு விவசாய இயந்திர உபகரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்காகவே ஜப்பானிய அரசு இந்நிதியுதவியை வழங்கியுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்தது.

ஜப்பானிய சுய உணவு உற்பத்தித் திட்டத்தின் கீழ் இந்த 468 மில்லியன் ரூபா நிதி இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன் கீழ் வழங்கப்படும் இயந்திர உபகரணங்கள் கமநல சேவைகள் திணைக் களத்தின் கமநல சேவை மத்திய நிலையங் களுக்கூடாக விவசாயிகளுக்கு கையளிக்கப்பட வுள்ளதுடன் விவசாயத் திணைக்களத்தினூ டாக அரசாங்கத்தின் விதை உற்பத்திப் பண்ணைகளுக்கும் வழங்கத் தீர்மானிக்கப் பட்டுள்ளது. கொள்வனவு செய்யப்படும் இயந்திர உபகரணங்களின் பெறுமதியில் ஒரு பகுதி நிதி மத்திய வங்கியின் விசேட கணக்கொன்றில் வைப்பிலிடப்பட வுள்ளதுடன், இந்நிதி உணவு உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி நடவடிக்கை களுக்காக உபயோகப்படுத்தப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக